சிவகங்கை மாவட்டத்தில் தனுஷ்-சிவகார்த்திகேயனின் புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் உரிமம் பெறப்படாத திருட்டு சி.டி.க்கள் அதிக அளவில் புகழக்கத்தில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு புகார்கள் வந்தன. இது குறித்து அதிரடி சோதனை நடத்த அவர் உத்தரவிட்டார்.
இதன்பேரில் மாவட்டம் முழுவதும் துணை கண்காணிப்பாளர்கள் முருகன், கார்த்திகேயன், கருப்புசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் சி.டி.கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் திருட்டு சி.டி.க்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
தனுசின் தொடரி, விக்ரமின் இருமுகன், சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, தோணி உள்ளிட்ட புதுப்படங்களின் சி.டி.க்களை போலீசார் கைப்பற்றினர். திருப்பத்தூரில் 114 சி.டி.க்களும், சிங்கம்புணரியில் 94 சி.டி.க்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சி.டி.கடைகளின் உரிமையாளர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.