பவானிசாகர் அருகே மின்சாரம் திருடிய காகித ஆலைக்கு ரூ.9 லட்சம் அபராதம்
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அடுத்துள்ள தயிர்ப்பள்ளம் கிராமத்தில் உள்ள பவானிஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ராமாசமி, கிராம நிர்வாக அலுவலர் கருப்புச்சாமி ஆகியோர் பவானிஆற்றுப்பகுதியில் சோதனையிட்டனர்.
அப்போது, பவானி ஆற்றில் சட்ட விரோதமாக 12 ஹெச்பி திறன் கொண்ட மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பது தெரிய வந்தது. இந்த தண்ணீர் கொத்த மங்கலத்தில் உள்ள அக்சரா காகித ஆலைக்கு கொண்டு செல்வதும் உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து, மின் மோட்டார் பறிமுதல் செய்து பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, அதே காகித ஆலையில் சட்டவிரோதமாக மின்சாரம் திருடியதாக கோவை மின்திருட்டு தடுப்பு பிரிவு அலுவலர்கள் ஆலையில் சோதனையிட்டு மின்சாரம் திருடியாதாக ரூ.9 லட்சத்து 14 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஆலையில் பீகார் மாநில தொழிலாளி எந்திர அரவையில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.