செய்திகள்

அரச்சலூரில் தாய் இறந்த சோகத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2016-10-21 12:00 IST   |   Update On 2016-10-21 12:00:00 IST
அரச்சலூரில் தாய் இறந்த சோகத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரச்சலூர்:

அரச்சலூர், கந்தன்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சண்முகசுந்தரம்(வயது25).

சண்முகசுந்தரத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் கண்பார்வை பாதிப்படைந்தது. இந்நிலையில் அவரது தாயார் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார்.

இதனால் சில நாட்களாகவே சண்முகசுந்தரம் சோகத்தில் இருந்துள்ளார். அம்மா இல்லாமல் நான் எப்படி இருப்பேன் நானும் செத்து போகிறேன் என்று அடிக்கடி சொல்லி கொண்டு இருந்தார்.

சம்பவத்தன்று சண்முகசுந்தரம் அதே பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து தான் வி‌ஷம் குடித்து விட்டதாக கூறி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும் சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News