செய்திகள்

பவானியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2016-10-17 11:19 GMT   |   Update On 2016-10-17 11:19 GMT
பவானியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி:

பவானி அந்தியூர் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி கவுரி (வயது46). கணவர் இறந்ததையொட்டி சீனிவாசபுரம் பழைய பஞ்சாயத்து ரோட்டை சேர்ந்த சலிம்பாட்சா என்பவருடன் கடந்த 10 மாதமாக கவுரி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கவுரிக்கும்-சலிப்பாட்சாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் பொது இடத்தில் காரசாரமாக மோதி கொண்டனர். அப்போது சலீம் பாட்சா, கவுரிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதையொட்டி கவுரி பவானி மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குபதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த சலிம்பாட்சாவை கைது செய்தார்.

Similar News