செய்திகள்
பள்ளிக்கரணையில் வாலிபர் அடித்து கொலை
பள்ளிக்கரணையில் வாலிபர் அடித்து கொலை
திருவான்மியூர்:
பள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் மதுக்கடை உள்ளது.
மதுக்கடையின் அருகே உள்ள மரத்தில் 40 வயது மதிக்கதக்க ஆண் பிணமாக தூக்கில் தொங்கினார்.
அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. மது போதையில் அவரை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது வேறு எங்காவது கொன்று விட்டு இங்கு தூக்கில் தொங்கவிட்டனரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.