செய்திகள்

பழவந்தாங்கலில் ரூ.25 லட்சம் மோசடி: காண்டிராக்டர் கைது

Published On 2016-10-03 09:24 GMT   |   Update On 2016-10-03 09:24 GMT
பழவந்தாங்கலில் ரூ.25 லட்சம் மோசடி செய்த காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்:

பழவந்தாங்கலில் நங்கநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. பில்டிங் காண்டிராக்டர், அதே பகுதியை இந்து காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (50). இவரும் பில்டிங் காண்டிராக்டர்.

இந்நிலையில் தனது தொழில் தேவைக்காக ஸ்ரீதர் சுரேஷ்பாபுவிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார்.

ஆனால் வாங்கி கடனை திருப்பி செலுத்தவில்லை. சுரேஷ்பாபு கடனை திருப்பி கேட்ட போது ஸ்ரீதர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்து சுரேஷ்பாபு பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பண மோசடி செய்த ஸ்ரீதரை கைது செய்தனர்.

Similar News