அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார் விருப்ப மனு
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சி 19-வது வார்டில் போட்டியிட விருப்ப மனுவை கழக மாநில அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோரிடம் கொடுத்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசியான இவர் முதல்வரின் ஒவ்வொரு பிறந்த நாளினை முன்னிட்டும் முத்தியால்பேட்டை பகுதியில் பிரம்மாண்டமான விழா நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றார்.
ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு 68 டன் அரிசி, 68 நாட்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கழகத்தினர் மற்றும் பொதுமக்களின் வாழ்த்தினை பெற்றார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தி முதல்வர் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத்தந்தபோது முத்தியால்பேட்டை பகுதியில் முல்லைப் பெரியாறு அணை போன்ற கட்-அவுட் அமைத்து அதில் குழாய் மூலம் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறுவது போன்று அமைத்து மக்களின் பாராட்டினைப் பெற்றவர் ஆர்.வி.ரஞ்சித்குமார்.
கடந்த 2011 முதல் 2016 வரை இதே பகுதியில் ஊராட்சிக் கவுன்சிலராக இருந்து மக்கள் தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கிளைக்கழக நிர்வாகிகளுடன் இவர் தனது விருப்ப மனுவினை அளித்தார்.