செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்ய முயற்சி: 42 பேர் கைது

Published On 2016-09-15 23:27 IST   |   Update On 2016-09-15 23:27:00 IST
நெல்லிக்குப்பம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்ற 11 பெண்கள் உள்பட 42 பேர் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் அருகே சி.என்.பாளையம் காலனி பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சாலைவசதி சரிவர இல்லை. இதனை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று சி.என்.பாளையத்தில் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் ஒன்று சேர்ந்து சுடுகாட்டுக்கு பாதையை சீரமைக்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்கள் நடுவீரப்பட்டு சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், மறியல் செய்ய முயன்றதாக கூறி, 11 பெண்கள் உள்பட 42 பேரை கைது போலீசார் செய்து, நடுவீரப்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Similar News