செய்திகள்
காஞ்சீபுரத்தில் சித்தராமையா உருவ பொம்மை எரிப்பு: த.மா.கா.வினர் 50 பேர் கைது
காஞ்சீபுரத்தில் சித்தராமையா உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மா.கா.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருசோத்தமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்கள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருசோத்தமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்கள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.