செய்திகள்
சோழவரம் கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு: 2 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு
சோழவரம் கடலில் மூழ்கி உயிரிழந்த என்ஜினீயரிங் மாணவர் உடலை 2 நாட்களுக்கு பிறகு போலீசார் மீட்டனர்.
மாமல்லபுரம்:
கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கெமிக்கல் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் மானாஷ் பாண்டே (வயது 20). இவரது சொந்த ஊர் புதுடெல்லி ஆகும்.
நேற்று முன்தினம் மானாஷ் பாண்டே நண்பர்கள் 6 பேருடன் கோவளம் கடற்கரைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அனைவரும் கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது ராட்சத அலை மானாஷ் பாண்டேவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இது குறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீனவர்கள் உதவியுடன் கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் முட்டுக்காடு முகத்துவார பகுதியில் உள்ள இறால் பண்ணா அருகே மானாஷ் பாண்டே உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கெமிக்கல் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் மானாஷ் பாண்டே (வயது 20). இவரது சொந்த ஊர் புதுடெல்லி ஆகும்.
நேற்று முன்தினம் மானாஷ் பாண்டே நண்பர்கள் 6 பேருடன் கோவளம் கடற்கரைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அனைவரும் கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது ராட்சத அலை மானாஷ் பாண்டேவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இது குறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீனவர்கள் உதவியுடன் கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் முட்டுக்காடு முகத்துவார பகுதியில் உள்ள இறால் பண்ணா அருகே மானாஷ் பாண்டே உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.