செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் யூரோ பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து பாங்காக்குக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் வைத்திருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் யூரோ பணம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.
இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்புதீனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் சுற்றுலா விசாவில் பாங்காக் செல்ல இருந்ததும் தெரிய வந்தது.
சென்னையில் இருந்து பாங்காக்குக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் வைத்திருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் யூரோ பணம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.
இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்புதீனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் சுற்றுலா விசாவில் பாங்காக் செல்ல இருந்ததும் தெரிய வந்தது.