செய்திகள்

மந்தைவெளியில் மாநகர பஸ் மோதி பள்ளி மாணவன் பலி: கல்லூரி மாணவர் காயத்துடன் தப்பினார்

Published On 2016-09-14 14:15 IST   |   Update On 2016-09-14 14:15:00 IST
மந்தைவெளியில் மாநகர பஸ் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
திருவான்மியூர்:

மந்தைவெளி ஏ.சி.எஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(18), 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் தனது நண்பரான கல்லூரி மாணவர் பால கிருஷ்ணனுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று ராயப்பேட்டையில் இருந்து மந்தைவெளி சென்று கொண்டிருந்தார்.

காலை 11 மணியளவில் மந்தைவெளி எல்லோ பேஜஸ் அருகில் சென்ற போது மாநகர பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது.

இதில் மாணவர் மகேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பால கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News