செய்திகள்

மாமல்லபுரத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிர் தப்பினர்

Published On 2016-09-14 11:41 IST   |   Update On 2016-09-14 11:42:00 IST
மாமல்லபுரத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 21 பேர் உயிர் தப்பினார்கள்
மாமல்லபுரம்:

நங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கல்பாக்கம் அடுத்த முதலியார் குப்பம் படகுத்துறைக்கு 2 வேன்களில் சுற்றுலா புறப்பட்டனர்.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொழிலாளர் நலவாரிய விடுதி அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்த போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதாமல் இருக்க டிரைவர் வண்டியை திருப்பினார்.

இதில் தடுமாறியதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. வேனின் கதவுப் பகுதி தரைப்பகுதியில் இருந்த தால் உள்ளே இருந்த பயணி களால் வெளியே வர முடியவில்லை. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மீட்டனர். வேனின் முன் கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டனர். இதில் டிரைவர் சிவப்பிரகாசம் உள்பட 21 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

கிழக்கு கடற்கரை சாலை 4 வழிபாதையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக வாகனங்கள் ஒரே வழியில் செல்கின்றன. இதனால் விபத்து நடந்ததாக தெரிகிறது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News