செய்திகள்

கடலூரில் கோவில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2016-09-13 10:34 IST   |   Update On 2016-09-13 10:34:00 IST
கடலூரில் கோவில் குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் நத்தவெளிரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 60) தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் உண்டு. நேற்று இரவு குமார் குடிபோதையில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே உள்ள தெப்பகுளத்துக்கு சென்றார். குளத்தின் படிக்கட்டில் நின்று கை,கால்களை கழுவிக் கொண்டு இருந்தார்.

திடீரென்று கால் தவறி குளத்தில் விழுந்தார். அவரால் நீந்த முடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இன்று காலை குளத்திற்கு சென்ற பொதுமக்கள் தண்ணீரில் முதியவர் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குளத்தில் மூழ்கி பலியான குமாரின் உடலை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News