செய்திகள்

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2016-09-12 15:58 IST   |   Update On 2016-09-12 15:58:00 IST
பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை. இவரது மகள் கோமதி(வயது 20). இவர் கடலூர் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி(கணிதம்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 9-ந் தேதி கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. எனவே மாணவியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர். மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News