செய்திகள்
வேளாங்கண்ணியில் அன்னை தெரசா முழு உருவ சிலை திறப்பு
வேளாங்கண்ணியில் அன்னை தெரசா முழு உருவச்சிலையை தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் திறந்து வைத்தார்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் அன்னை தெரசா முழு உருவச்சிலையை தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் திறந்து வைத்தார்.
அன்பினாலும், கருணையினாலும், மனித நேயத்தாலும் உலக மக்களின் இதயங்களை கவர்ந்தவர் அன்னை தெரசா. 47 ஆண்டுகள் மக்களுக்கு தொண்டாற்றிய அன்னை தெரசா கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். கடந்த 4-ந்தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அன்னை தெரசாவின் பெயரை புனிதர்கள் பட்டியலில் சேர்க்கிறோம் என்று அறிவித்தார். இதன்மூலம் அன்னை தெரசா கொல்கத்தாவின் புனித தெரசா ஆனார். அன்னை தெரசா புனித தெரசா என்று அழைக்கப்படுகிறார்.
இதைத்தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் சார்பில் அன்னை தெரசாவுக்கு வேளாங்கண்ணியில் முழுஉருவசிலை நிறுவப்பட்டது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய கீழ்கோவிலில் இருந்து அன்னை தெரசாவின் முழுஉருவச்சிலை வேளாங்கண்ணி உயர்நிலை பள்ளிக்கு எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள புனித தெரசா வளாகத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் அங்கு சிலை நிறுவப்பட்டது. தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், சிலையை புனிதம் செய்து திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. விழாவில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கியசுந்தரம், பேரூராட்சி தலைவர் தாமஸ்ஆல்வா எடிசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட்அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணியில் அன்னை தெரசா முழு உருவச்சிலையை தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் திறந்து வைத்தார்.
அன்பினாலும், கருணையினாலும், மனித நேயத்தாலும் உலக மக்களின் இதயங்களை கவர்ந்தவர் அன்னை தெரசா. 47 ஆண்டுகள் மக்களுக்கு தொண்டாற்றிய அன்னை தெரசா கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். கடந்த 4-ந்தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அன்னை தெரசாவின் பெயரை புனிதர்கள் பட்டியலில் சேர்க்கிறோம் என்று அறிவித்தார். இதன்மூலம் அன்னை தெரசா கொல்கத்தாவின் புனித தெரசா ஆனார். அன்னை தெரசா புனித தெரசா என்று அழைக்கப்படுகிறார்.
இதைத்தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் சார்பில் அன்னை தெரசாவுக்கு வேளாங்கண்ணியில் முழுஉருவசிலை நிறுவப்பட்டது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய கீழ்கோவிலில் இருந்து அன்னை தெரசாவின் முழுஉருவச்சிலை வேளாங்கண்ணி உயர்நிலை பள்ளிக்கு எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள புனித தெரசா வளாகத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் அங்கு சிலை நிறுவப்பட்டது. தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், சிலையை புனிதம் செய்து திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. விழாவில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கியசுந்தரம், பேரூராட்சி தலைவர் தாமஸ்ஆல்வா எடிசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட்அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.