செய்திகள்

கொள்ளிடம் அருகே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

Published On 2016-09-10 17:43 IST   |   Update On 2016-09-10 17:43:00 IST
கொள்ளிடம் அருகே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியம் பழையபாளையம் ஊராட்சியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

முகாமில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் சிறுகண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்க மளித்தனர்.

இ-சேவை மையங்களை அமைத்து, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களும் கணினி மூலம் உடனடியாகப் பெறுவதற்கும், ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் அம்மாதிட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று போன்றவற்றிற்காக கோரிக்கை மனுக்களை அளித்து அன்றைய தினமே பெற்றுக் கொள்ளலாம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் வருவாய்த்துறை சார்பில் 31 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மற்றும் பட்டா நகல்களையும், 34 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையும், 6 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புதிட்டத்தின் கீழ் ரூ.72,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத் துறையில் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1504 மதிப்பில் விலையில்லா தென்னங்கன்றுகள், நெல் நுண்ணூட்டங்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.19,600 மற்றும் ரூ.756 மதிப்பில் மானிய விலையில் உரம் என மொத்தம் ரூ.94 ஆயிரத்து 360 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் சுபாநந்தினி, ஒன்றியக்குழுத் தலைவர் மீனா, இணை இயக்குநர் (வேளாண்மை) சேகர், வட்டாட்சியர் மலர்விழி, ஊராட்சி மன்றத் தலைவர் மலர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News