செய்திகள்

வேதாரண்யத்தில் பஸ்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: டிரைவர் படுகாயம்

Published On 2016-09-09 10:42 GMT   |   Update On 2016-09-09 10:42 GMT
வேதாரண்யத்தில் பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்த பஸ் சென்னைக்கு சென்று விட்டு, வேதாரண்யத்திற்கு பயணிகளுடன் திரும்பி கொண்டிருந்தது. பஸ்சின் டிரைவராக கத்தரிப்புலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், கண்டக்டராக தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்த தர்மமணி ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் பஸ் தேத்தாகுடி வடக்கு புதுரோடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது வேதாரண்யத்திலிருந்து எதிரே வந்த ஆம்னி வேன் பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் பஸ்சின் வலது புறம் மற்றும் கண்ணாடிகள் உடைந்தது. இதேபோல் வேனின் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த கரியாப்பட்டினம் வடக்கு ராஜாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News