செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி மாடு பலி- 2 பேர் படுகாயம்

Published On 2016-09-01 17:20 IST   |   Update On 2016-09-01 17:20:00 IST
ஜெயங்கொண்டம் அருகே மின்கம்பி மாட்டு வண்டி மீது விழுந்ததில் மாடு இறந்து போனது. மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவன்தொண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 45). மாட்டு வண்டியில் விறகு வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் வழக்கம் போல் மாட்டு வண்டியில் விறகுகளை ஏற்றி கொண்டு வியாபாரத்திற்க்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராஜாகொள்ளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மின் கம்பி ஒன்று அவர் வந்த மாட்டு வண்டி மீது விழுந்தது. இதில் ராமச்சந்திரன் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ரவி மின் கம்பியை அகற்ற முயற்சி செய்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் மாடு சம்பவ இடத்தில் பலியானது.

படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News