செய்திகள்
ஈரோடு பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
ஈரோடு பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த பயணி ஒருவரிடம் இருந்து அவரது செல்போன் வாலிபர் ஒருவர் திருடி கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் திருடன்...திருடன்...என குச்சலிட்டார். அருகில் இருந்த மற்ற பயணிகள் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயணிகள் பிடித்து வைத்திருந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவன் தஞ்சாவூர் மாவட்டம் முனியப்ப ஆண்டவர் காலனியை சேர்ந்த சிவகுமார்(வயது24) என தெரியவந்தது. ஈரோட்டில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.