செய்திகள்
ஈரோடு மற்றும் கோபியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இன்று காலையும் குளிர்ச்சி நிலவுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் பரவலாக மழை பெய்தது.மழை பெய்யாத பகுதியில் குளிர் காற்று வீசியது.
ஈரோடு கோபி, பெருந்துறை ஆகிய பகுதியில் பரவலாக மழை பெய்தது. அப்பகுதியில் இன்று காலையும் குளிர்ச்சி நிலவுகிறது.