செய்திகள்
திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: தாய்-மகள் பலி
திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்தில் தாய் மற்றும் மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பெண்ணாடம்:
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சீனிவாசராகவன் (வயது 37). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது தாயார் உச்சிவனம் (60) உடல் நலம் பாதிக்கப்பட்டது. தாயாரை பார்ப்பதற்காக சீனிவாச ராகவன் ஸ்ரீரங்கம் வந்தார்.
பின்னர் தனது தாயார் உச்சிவனம் மற்றும் அக்காள் விஜயலட்சுமி (45) யுடன் சென்னையில் உள்ள ஆஸ்பத் திரிக்கு காரில் சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து 3 பேரும் நேற்று மாலை ஸ்ரீரங்கத்துக்கு காரில் புறப்பட்டனர். காரை சீனிவாசராகவன் ஓட்டிவந்தார்.
நள்ளிரவு 1 மணி அளவில் கார் ராமநத்தத்தை அடுத்த அதர்நத்தம் கைகாட்டி பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அந்த சமயத்தில் காருக்கு முன்னால் லாரி சென்று கொண்டிருந்தது. லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி நின்றது.
இந்த விபத்தில் உச்சிவனம், விஜயலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் இறந்தனர். சீனிவாச ராகவன் சீட்பெல்ட் அணிந் திருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேப்பூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு காருக்குள் சிக்கி உயிரிழந்த தாய்-மகள் உடல்களை மீட்டனர்.
காயமடைந்த சீனிவாச ராகவனை போலீசார் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உச்சிவனம், விஜயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சீனிவாசராகவன் (வயது 37). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது தாயார் உச்சிவனம் (60) உடல் நலம் பாதிக்கப்பட்டது. தாயாரை பார்ப்பதற்காக சீனிவாச ராகவன் ஸ்ரீரங்கம் வந்தார்.
பின்னர் தனது தாயார் உச்சிவனம் மற்றும் அக்காள் விஜயலட்சுமி (45) யுடன் சென்னையில் உள்ள ஆஸ்பத் திரிக்கு காரில் சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து 3 பேரும் நேற்று மாலை ஸ்ரீரங்கத்துக்கு காரில் புறப்பட்டனர். காரை சீனிவாசராகவன் ஓட்டிவந்தார்.
நள்ளிரவு 1 மணி அளவில் கார் ராமநத்தத்தை அடுத்த அதர்நத்தம் கைகாட்டி பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அந்த சமயத்தில் காருக்கு முன்னால் லாரி சென்று கொண்டிருந்தது. லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி நின்றது.
இந்த விபத்தில் உச்சிவனம், விஜயலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் இறந்தனர். சீனிவாச ராகவன் சீட்பெல்ட் அணிந் திருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேப்பூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு காருக்குள் சிக்கி உயிரிழந்த தாய்-மகள் உடல்களை மீட்டனர்.
காயமடைந்த சீனிவாச ராகவனை போலீசார் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உச்சிவனம், விஜயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.