செய்திகள்

ஈரோடு அருகே விபத்து: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

Published On 2016-08-19 10:23 IST   |   Update On 2016-08-19 10:23:00 IST
ஈரோடு அருகே விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள மூலக்கரை சுள்ளிக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் நடராஜன. இவரது மகன் தீபக் குமார் (வயது 19). ஈரோடு குமலன் குட்டையைசேர்ந்த காஜா என்பவரின் மகன் அமீர்கான் (19).

இவர்கள் இருவரும் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஈசி.ஈ படித்து வந்தனர்.

நண்பர்களான இவர்கள் நேற்று ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள எளையாகவுண்டன் பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

மோட்டார் சைக்கிளை தீபக் குமார் ஓட்டினார். அமீர் கான் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது பின்னால் வந்த ஒருவேன் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டின் நடுவே போடப்பட்டு உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.

இதில் தீபக் குமார், அமீர் கான் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஆபத்தான நிலையில் இருந்த தீபக் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அமீர்கான் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த 2 மாணவர்களின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் கதறி அழுதது காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

Similar News