செய்திகள்

நொய்யல் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2016-08-18 15:23 GMT   |   Update On 2016-08-18 15:23 GMT
நொய்யல் பகுதியில் திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலயுதம்பாளைம்:

குந்தானிபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது29) இவர் அருகாமையில் உள்ள நாடார்புரத்தில் ஒரு பெட்டி கடை அருகே திருட்டுத்தனமாக பிராந்திபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதாவிற்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பிராந்தி பாட்டில்களை வைத்து சுரேஷ் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 15 பிராந்திப்பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் நொய்யல் பங்களாநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (47) இவர் அருகாமையில் உள்ள அண்ணாநகரில் ஒரு பெட்டி கடை அருகே திருட்டுத்தனமாக பிராந்திபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகலாவிற்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பிராந்தி பாட்டில்களை வைத்து சுப்பிரமணி விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 410 பிராந்திப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News