செய்திகள்
சிவகிரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
சிவகிரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையம் விளாங்காட்டு வலசு என்ற இடத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 52) தொழிலாளி. கடந்த 4 வருடமாக இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகாததால் பொன்னுசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் தோட்டத்துக்கு வைக்கப்படும் எலிமருந்தை (விஷம்) குடித்த பொன்னுசாமி மயங்கி விழுந்தார். உடனே அவரை சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையம் விளாங்காட்டு வலசு என்ற இடத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 52) தொழிலாளி. கடந்த 4 வருடமாக இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகாததால் பொன்னுசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் தோட்டத்துக்கு வைக்கப்படும் எலிமருந்தை (விஷம்) குடித்த பொன்னுசாமி மயங்கி விழுந்தார். உடனே அவரை சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.