செய்திகள்

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி மர்மச்சாவு

Published On 2016-08-17 18:04 IST   |   Update On 2016-08-17 18:04:00 IST
என்.எல்.சி. தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து நெய்வேலி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெய்வேலி:

நெய்வேலி புதுநகர் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் மணிநாதன் (வயது 34). இவர் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்தார்.

இவர் நேற்று மாலை நெய்வேலி மத்திய பஸ் நிறுத்தத்தின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News