செய்திகள்

சுதந்திர தின விழா: அரியலூர் மாவட்டத்தில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்

Published On 2016-08-15 16:19 IST   |   Update On 2016-08-15 16:19:00 IST
சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுவதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. பின்னர் கலெக்டர் சரவணவேல்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு அணில்குமார் கிரி ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் 62 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பூமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரெங்கராஜன், செந்தில்குமார், செய்தி மக் கள் தொடர்பு அலுவலர் செந்தில், ஊராட்சி உதவி இயக்குனர் கங்காதரணி,

ஆர்.டி.ஓ.க்கள் அரியலூர் மோகனராஜன், உடையார் பாளையம் டினாகுமாரி, தாசில்தார்கள் அரியலூர் முத்துகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் திருமாறன், செந்துறை அமுதா, அரியலூர் டி.எஸ்.பி. அசோக்குமார், டி.எஸ்.பி.க்கள் முத்துக்கருப்பன், இனிகோ திவ்யன், சங்கரநாராயணன், சோமசேகர், எஸ்.பி. அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன், அரியலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மற்றும் அனைத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News