அரியலூர்-கரூர் மாவட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சிறப்பாக வருகிற 15-ந் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் பின்வரும் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கிராம ஊராட்சிகளில் ஜனவரி முதல் ஜூலை முடிய ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். 2016-2017ஆம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளு க்கான திட்ட அறிக்கை குறித்து விவாதித்தல்.
சுகாதாரம் - ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மான்யம் குறித்து விவாதித்தல். கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல்.திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள் குறித்து விவாதித்தல். குழுக்களுக்கு கிராம நலன்கருதி ஒத்துழைப்பு குறித்து விவாதித்தல். ஒருங்கி ணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் ஒருங்கி ணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்துவது குறித்து விவாதித்தல். என பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சரவணவேல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் கரூர் மாவட்டத்தில் 157 கிராம ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது.