செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே அண்ணனை தாக்கிய தம்பி கைது

Published On 2016-08-11 15:50 IST   |   Update On 2016-08-11 15:51:00 IST
ஜெயங்கொண்டம் அருகே அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் வீரமணி (39). இவரது தம்பி சுரேஷ் (31) வீரமணி கடந்த 4-ம் தேதியன்று தனது மனைவி கொளஞ்சியை அடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த சுரேஷ் அண்ணன் வீரமணி தட்டிகேட்டார். என் மனைவியை நான் அடிக்கிறேன் உனக்கு என்ன என்று கோபமடைந்து அருகில் இருந்த ஹாலோபிளாக் கல்லை எடுத்து சுரேஷ் தாக்கி மிரட்டியுள்ளார். இதில் காயமடைந்த வீரமணி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம்குறித்து ஆண்டிமடம் எஸ்.ஐ பரமசிவம் வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Similar News