செய்திகள்

குவைத் விமானம் தாமதம்

Published On 2016-08-11 14:49 IST   |   Update On 2016-08-11 14:49:00 IST
மோசமான வானிலை காரணமாக குவைத் விமானம் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஆலந்தூர்:

சென்னையில் இருந்து குவைத்துக்கு இன்று அதிகாலை விமானம் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் 252 பயணிகள் செல்ல காத்து இருந்தனர்.

ஆனால் குவைத்தில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக காலை தாமதமாக 10.30 மணிக்கு வரும் எனவும் மீண்டும் அந்த விமானம் குவைத்துக்கு 11.30 மணிக்கு தாமதமாக புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Similar News