செய்திகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சிற்றம்பலம், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தமிழ்மணி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் பிச்சை, எச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் துரைசாமி, துரைராஜ், ராஜேந்திரன், தனசிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொதுவினியோக முறையை பலப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பினை உருவாக்கி வேலையின்மையை போக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை விதிவிலக்கின்றி நடைமுறைப்படுத்தி, அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரத்துக்கு குறையாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ரெயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை புகுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்க கூட்டமைப்பினர் கையில் கொடியை பிடித்தபடியே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன், பாஸ்கரன், திருவள்ளுவர் உள்பட சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சிற்றம்பலம், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தமிழ்மணி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் பிச்சை, எச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் துரைசாமி, துரைராஜ், ராஜேந்திரன், தனசிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொதுவினியோக முறையை பலப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பினை உருவாக்கி வேலையின்மையை போக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை விதிவிலக்கின்றி நடைமுறைப்படுத்தி, அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரத்துக்கு குறையாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ரெயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை புகுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்க கூட்டமைப்பினர் கையில் கொடியை பிடித்தபடியே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன், பாஸ்கரன், திருவள்ளுவர் உள்பட சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.