செய்திகள்

மாமல்லபுரம் பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது

Published On 2016-08-08 10:14 GMT   |   Update On 2016-08-08 10:14 GMT
மாமல்லபுரம் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் வசித்து வந்தவர் காமாட்சி (42). கணவரை பிரிந்த அவர் கள்ளக்காதலன் விவேக்குடன் வாழ்ந்து வந்தார். இவர்களது சொந்த ஊர் செங்கல்பட்டை அடுத்த அனுமந்த புத்தேரி ஆகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் காமாட்சி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலன் விவேக் தலைமறைவாகி இருந்தார்.

இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செங்கல்பட்டில் பதுங்கி இருந்த விவேக்கை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

அனுமந்தபுத்தேரியில் எங்களது கள்ளக்காதல் பற்றி அனைவருக்கும் தெரிந்ததால் இருவரும் கணவன்-மனைவி எனக்கூறி மாமல்லபுரத்தில் வீடு எடுத்து தங்கினோம். மது அருந்திவிட்டு அடிக்கடி பூஞ்சேரியில் ஒதுக்குப் புறமாக உள்ள வீட்டில் உல்லாசத்தில் ஈடுபடுவோம்.

நேற்று முன்தினம் முன்பு போல் காமாட்சி ஒத்துழைப்பு தர மறுத்தார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவளிடம் வேறு நபர்களிடம் ஏதும் பழக்கம் இருக்கிறதா? அப்படி இருந்தால் விட்டுவிடு என்று கூறினேன்.

இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து படுத்திருந்த காமாட்சி தொண்டையில் குத்தினேன். பின்னரும் ஆத்திரம் தீராமல் கோழி அறுப்பது போல கழுத்தின் இரு புறமும் அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News