செய்திகள்

காஞ்சிபுரத்தில் பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

Published On 2016-08-07 11:35 GMT   |   Update On 2016-08-07 11:35 GMT
காஞ்சிபுரத்தில் பைக் மீது கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் துளசிதர். இவர் தனது நண்பர் சுகுமாருடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்ய வந்தார்.

காஞ்சிபுரம் எல்லையான கீழ்அம்பி என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த துளசிதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் சுகுமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Similar News