செய்திகள்

துரைப்பாக்கத்தில் மாணவன் தவறி விழுந்து பலி

Published On 2016-08-07 15:47 IST   |   Update On 2016-08-07 15:47:00 IST
துரைப்பாக்கத்தில் மாணவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவான்மியூர்:

துரைப்பாக்கம் மேட்டு குப்பத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் பிரசாத் (9) இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடையில் தண்ணீர் கேனை எடுக்க  நடந்து சென்றான். அப்போது கால் தவறி சாலையில் இருந்த கல் மீது விழுந்தான்.

இதில் அவனுக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவனை மீட்டு சிகிச்கைக்காக அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தான்.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News