செய்திகள்

அந்தியூரில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

Published On 2016-08-06 16:30 IST   |   Update On 2016-08-06 16:30:00 IST
அந்தியூரில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தியூர்:

அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் அருகே குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. மளிகை கடையின் பின்புறம் இவர் குடும்பத்துடன் வசித்த வருகிறார்.

நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் குணசேகரன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இவரது கடையின் அருகே ஒரு மருந்து கடை உள்ளது.

நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம ஆசாமிகள் மளிகை கடையின் பூட்டை உடைத்தனர். அந்த பூட்டை அருகே உள்ள சாக்கடையில் வீசிய கொள்ளையன் கடைக்கு உள்ளே சென்று அங்கிருந்த ரூ.8500-ஐ திருடினான். பிறகு அருகில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமி அங்கிருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தான்.

அப்போது கடையின் பின்னால் உள்ள வீட்டில் தூங்கி கொண்டு இருந்த குணசேகரன்சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தார்.

அப்போது கடையின் ‌ஷட்டர் மேலே தூக்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் ஒரு ஆசாமி அந்த வழியாக நடந்து சென்றான். இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது அவர் மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

இதனால் அவர் தனது கடைக்கு திரும்பி வந்தார். இந்த நேரத்தில் மேலே தூக்கி விடப்பட்டு இருந்த ‌ஷட்டர் கிழே இறக்கி விடப்பட்டு இருந்தது.

அப்போது தான் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை பிடிக்க சென்றபோது தனது கடைக்குள் திருடன் இருந்து உள்ளதையும், பணத்தை திருடி விட்டு அவன் திறந்து இருந்த ‌ஷட்டர் வழியாக வெளியில் வந்து ‌ஷட்டரை கீழே இறக்கி விட்டு தப்பி ஓடியதும் தெரிய வந்தது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் 2 கடைகளிலும் பணத்தை திருடி சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News