செய்திகள்

பாலாற்றில் தடுப்பணையை கண்டித்து ரெயில் குடிநீர் தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டம்

Published On 2016-08-06 14:33 IST   |   Update On 2016-08-06 14:33:00 IST
பாலாற்றில் தடுப்பணையை கண்டித்து ரெயில் குடிநீர் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு:

வாணியம்பாடி அடுத்த பில்லூரில் பாலற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணையை கட்டி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தமிழ்தேச மக்கள் கட்சி, த.மு.மு.க. ஆகியவை இணைந்து செங்கல்பட்டு அருகே பாலூரில் உள்ள மத்திய அரசின் ரெயில் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலாற்றில் தடுப்பணை கட்டிய ஆந்திர அரசை கண்டித்தும். இதில் தலையிடாமல் உள்ள மத்திய அரசை கண்டித்தும் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாலாற்று படுகையில் உள்ள இந்த தொழிற்சாலையால் சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படு வதாகவும் குற்றச்சாட்டு கூறினர்.

தகவல் அறிந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட 33 பேரை கைது செய்தனர். அவர்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News