செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தூங்கிய போது லாரி தீப்பிடித்து டிரைவர் பலி

Published On 2016-08-05 13:03 IST   |   Update On 2016-08-05 13:03:00 IST
தூங்கிய போது லாரி தீப்பிடித்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

வாலாஜாபாத்தை அடுத்த புலியம்பாக்கத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார்.

இவர் படப்பையை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கண்ணாடி லோடு ஏற்றுவது வழக்கம். நேற்று இரவு கம்பெனிக்கு லோடு ஏற்ற தேவராஜ் லாரியை ஓட்டி சென்றார். இன்று அதிகாலை பொருட்கள் ஏற்ற இருந்ததால் கம்பெனி அருகே லாரியை நிறுத்தி விட்டு அதிலேயே தேவராஜ் தூங்கினார்.

இந்த நிலையில் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அப்போது லாரிக்குள் தேவராஜ் கரிக்கட்டையாக இறந்து கிடப்பது தெரிந்தது. லாரியில் தீப்பிடித்த போது வெளியே வரமுடியாமல் அவர் தீயில் சிக்கி இறந்து இருப்பது தெரியவந்தது.

லாரியில் தீப்பிடித்தது எப்படி? நாசவேலை காரணமா? என்பது குறித்து மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Similar News