செய்திகள்

கலெக்டர் அலுவலகம் அருகே ஆம்புலன்சு வேன் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்

Published On 2016-08-05 13:00 IST   |   Update On 2016-08-05 13:01:00 IST
ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே ஆம்புலன்சு வேன் மோதி கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்.

ஈரோடு:

ஈரோடு பகுதியை சேர்ந்தவர் லலித் குமார் . இவர் திண்டலில் உள்ள ஒரு என்ஜியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

இன்று காலை இவர் ஈரோடு - பெருந்துறை ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு மூதாட்டியை ஏற்றி கொண்டு ஆம்புலன்ஸ் வேன்சைரன் ஒலித்து கொண்டு வந்து கொண்டு இருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் இந்த ஆம்புலன்ஸ் வேனும், மாணவர் லலித் குமார் வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் தூக்கி எறியப்பட்ட லலித் குமார் பலத்த காயம் அடைந்தார்.

இதனால் மயக்க நிலையில் இருந்த அவர் ஈரோட்டடில் உள்ள ஒரு தனியார் ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மாணவர் லலித் குமார் மீது மோதிய ஆம்புலன்ஸ் வேனை முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி ஆம்பு லன்ஸ் வேனை அங்கிருந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News