செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டெருமையை வேட்டையாடி தின்ற புலிகள்

Published On 2016-08-04 11:08 IST   |   Update On 2016-08-04 11:09:00 IST
சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டெருமையை இரண்டு புலிகள் தாக்கி கொன்றது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது எடுத்த வன விலங்குகள் கணக்கெடுப்பின்படி சத்தி புலிகள் காப்பகத்தில் 60 புலிகள் இருப்பதாக வன அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் சத்தி புலிகள் காப்பகம் கரளையம் காப்புக்காடு படிகரை என்ற இடத்தில் ஒரு காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த 2-க்கும் மேற்பட்ட புலிகள் அந்த காட்டெருமை மீது பாய்ந்தது.

புலிகளிடமிருந்து தப்பிக்க அந்த காட்டெருமை போராடிய போது புலிகளின் ஆவேசப்பிடியிலிருந்து தப்ப முடியவில்லை.

பிறகு அந்த புலிகள் காட்டெருமையை கொன்று அதன் உடலை தின்று மீதியை போட்டு விட்டு சென்று விட்டது.

இதுபற்றி வனப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்படி வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டெருமையை பார்வையிட்டனர்.

காட்டெருமையை ஆய்வு செய்த போது அது புலிகள் தாக்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அருகே புலிகளின் கால் தடமும் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து கால்நடை மருத்துவர் மனோகரனும் வரவழைக்கப்பட்டார். காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

பிறகு காட்டெருமையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

Similar News