செய்திகள்

பவானியில் தூக்குபோட்டு பெண் தற்கொலை

Published On 2016-08-03 21:41 IST   |   Update On 2016-08-03 21:41:00 IST
பவானியில் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

பவானியில் உள்ள பழனியாண்டவா கோவில் வீதி சந்து பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 40).

மாரியம்மாள் தனது மகன்களுடன் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை போடுவாராம். இதன்பிறகு தனது வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டு இருப்பார். கோபம் தணிந்த பிறகு அவர் கதவை திறந்து கொண்டு வெளியே வருவது வழக்கமாக இருந்தது.

சம்பவத்தன்றும் அவர் தனது மகனுடன் சைக்கிள் ரிப்பேர் செய்வதற்கு பணம் கொடுப்பது சம்பந்தமாக தகராறு செய்தார். பிறகு அவர் கோபித்து கொண்டு தனது வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்

இதன்பிறகு வெகுநேரம் ஆகியும் மாரியம்மாள் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் விக்னேஷ் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது தனது தாயார் மாரியம்மாள் ஓட்டு வீட்டு சட்டத்தில் தனது சேலையால் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது தாயாரை சேலையை அறுத்து தூக்கில் இருந்து கீழே இறக்கினார்.

இதன்பிறகு மயக்க நிலையில் இருந்த அவரை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News