செய்திகள்

பட்டா மாறுதலில் உள்ள குறைகளை களைய வேண்டும்: காங். வலியுறுத்தல்

Published On 2016-07-28 23:01 IST   |   Update On 2016-07-28 23:01:00 IST
பட்டா மாறுதல் முறையில் உள்ள முரண்பாடுகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பிக்கும் போது அதற்குரிய ஆவணங்களை சரிபார்த்து நிலம் விற்பவர் தனக்கு பாத்தியப்பட்ட குறிப்பட்ட சர்வே எண்ணில் முழுவதும் விற்று இருந்தால் அவரது பெயரை நீக்கி, வாங்குபவரின் பெயரை சேர்க்க வேண்டும்.

அல்லது குறிப்பட்ட சர்வே எண்ணில் ஒரு பாகம் மட்டும் விற்பனைசெய்திருந்தால் பெயர் சேர்த்தலோ அல்லது உட்பிரிவோ செய்ய வேண்டும். இந்த முறையை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவும் உள்ளது.

ஆனால் இந்த உத்தரவு நடை முறைப்படுத்தப்படுவது இல்லை.புதிய பட்டாவில் பெயர் சேர்த்தல் மட்டுமே செய்யப்படுகிறது விற்பவர் பெயரை நீக்குதலோ, உட்பிரிவோ செய்து வாங்குபவரின் பெயர் மட்டும் வர வேண்டும் என்றால் பலமாதங்கள் சிரமப்பட வேண்டி உள்ளது.

இந்த இடத்தில் வீடு அல்லது தொழிற்சாலைக்கு அங்கீகாரம் பெறுவது, கடன் பெறுவது, பாகப்பிரிவினை விற்பனை, செய்வது போன்ற நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்படுகிறது.

எனவே பட்டா மாறுதல் முறையில் உள்ள முரண்பாடுகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News