செய்திகள்
கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து
ஈரோடு அருகே வீட்டில் கியாஸ் கசிந்து தீ பிடித்து எறிந்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்து சிலிண்டரை அப்புறப்படுத்தினர்.
ஈரோடு:
ஈரோடு 16 அடி ரோட்டில் உள்ள அசோகபுரத்தில் வசித்து வருபவர் பாலசுந்தர்.
இவரது மனைவி நேற்று சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது கியாஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் கழன்று அதில் இருந்து கியாஸ் கசிந்து உள்ளது.
இதனால் குப் என்று தீப்பிடித்து எரிந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மள மள என்று பிடித்து எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு படையினர் அதிகாரி காளிதாஸ் தலைமையில் விரைந்து சென்று ரெகுலேட்டரில் எரிந்த தீயை அணைத்து சிலிண்டரை அப்புறப்படுத்தினர்.