செய்திகள்
நஞ்சை ஊத்துக்குளி அருகே வேன் கவிழ்ந்தது; 2 பெண்கள் படுகாயம்
நஞ்சை ஊத்துக்குளி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோட்டை அடுத்த விளக்கேத்தி பழைய அண்ணாமலை பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது33). இவர் தனது மனைவி பூங்கொடி (27), தாயார் மணி (50) ஆகியோருடன் ஒரு வேனில் சென்று கொண்டு இருந்தனர். இந்த வேனை வடிவேல் என்பவர் ஓட்டி சென்றார். வேன் ஈரோட்டை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி அருகே சென்று கொண்டு இருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடியது. பிறகு அந்த வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த மணி மற்றும் பூங்கொடி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.