செய்திகள்

தேவகோட்டையில் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம்

Published On 2016-07-27 22:41 IST   |   Update On 2016-07-27 22:41:00 IST
தேவகோட்டையில் ராணுவத்தில் சேர்வது குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம் நடந்தது.
தேவகோட்டை:

தேவகோட்டையில் ராணுவத்தில் சேர்வது குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதனை நேதாஜி பயிற்சி நிலைய நிர்வாகி சிதம்பரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

உடற்கல்வி இயக்குனர் பூமிநாதன், சிலுவைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆதியாகுடி சண்முகவேல், கணேசன்உடையார், ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News