செய்திகள்

குன்றக்குடி அருகே கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி அர்ச்சகர் பலி

Published On 2016-07-26 15:33 IST   |   Update On 2016-07-26 15:33:00 IST
கோவில் தெப்பத்தில் மூழ்கி அர்ச்சகர் பரிதாபமாக இறந்தார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வ.சூரக்குடியில் மீனாட்சி–சுந்தரேசுவரர் ஆலயம் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இந்தக் கோவிலில் உதவி அர்ச்சகராக செயல்பட்டவர் வைத்தியநாதன் (வயது 43).

இவர், நேற்று பகல் கோவிலில் பூஜை, புனஸ் காரங்களில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதன் பிறகு மதியம் மற்றும் மாலை, இரவு பூஜைகளுக்கு வைத்தியநாதன் வரவில்லை. இதனால் சக அர்ச்சகர்கள் அவரை தேடினர். வீட்டில் கேட்டபோது, காலையில் கோவிலுக்கு சென்றவர் அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவிலுக்கு வெளியே உள்ள கோவில் தெப்பக் குளத்தில் வைத்தியநாதன் உடல் மிதப்பது தெரியவந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது குளத்தின் கரையில், வைத்தியநாதனின் சைக்கிள் நிற்பது தெரிய வந்தது. இதனால் குளத்தில் கால் கழுவச்சென்ற போது, அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News