செய்திகள்

ஈரோட்டில்,இன்று காலை பஸ்மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் படுகாயம்

Published On 2016-07-22 16:55 IST   |   Update On 2016-07-22 16:55:00 IST
ஈரோட்டில் பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு:

ஈரோடு குமலன் குட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மோகன் (வயது 20), கோகுல் (20) இவர்கள் இருவரும் பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

இவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் இன்று காலை கல்லூரிக்கு சென்றனர்.

ஈரோடு செங்கோடம்பள்ளம் அருகே சென்ற போது முன்னால் சென்ற ஒரு கல்லூரி பஸ் திடீர் என்று பிரேக் போட்டு நின்றது.

இதன் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் மோகன் , கோகுல் ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இந்த நேரத்தில் பின்னால் வந்த ஒரு அரசு டவுன் பஸ் மாணவர்கள் மீது மோதியது.இதில் மோகன், கோகுல் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News