செய்திகள்

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2016-07-21 17:58 IST   |   Update On 2016-07-21 17:58:00 IST
கோபி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி:

கோபி தாலுகா கொளப்ப லூர், அம்மன் கோவில் பதி, வரதப்ப கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி துர்காதேவி(23). சம்பவத்தன்று ஆனந்தன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

துர்காதேவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். ஆனந்தன் மனைவிக்கு போன் செய்துள்ளார். துர்காதேவி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தன் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் விபரத்தை கூறினார். அதன்படி பக்கத்து வீட்டு பெண் கதவை தட்டி உள்ளார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இதனால் பதற்றத்துடன் ஜன்னல் வழியாக பார்த்த துர்காதேவி அறையில் தூக்கி மாட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

இது குறித்து சிறுவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துர்காதேவி உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். துர்காதேவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று உடனடியாக தெரியவில்லை.

Similar News