செய்திகள்

திருப்போரூரில் 8-ம் வகுப்பு மாணவன் தீக்குளிப்பு

Published On 2016-07-06 14:46 IST   |   Update On 2016-07-06 14:46:00 IST
திருப்போரூரில் 8-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

திருப்போரூர் மடம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் டில்லிபாபு (வயது 13) திருப்போரூர் வணிகர் வீதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று இரவு வீட்டில் இருந்த டில்லிபாபு மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டான். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த பெற்றோர் உடனடியாக தீயை அணைத்து அவனை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டில்லிபாபு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

பள்ளிக்கு பெற்றோரை அழைத்து வரும்படி நிர்வாகத்தினர் கூறியதால் டில்லிபாபு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News