செய்திகள்

ஆயுதப்படை போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2016-07-03 16:15 IST   |   Update On 2016-07-03 16:15:00 IST
ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீசாருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஈரோடு:

ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீசாருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரூபேஸ்குமார் மீனா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணை சூப்பிரண்டு நரசிம்மன், இன்ஸ்பெக்டர்கள் சேகர், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஆயுதப்படை போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 300–க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

Similar News