செய்திகள்

கடலூரில் வி‌ஷம் குடித்து பெண் சாவு

Published On 2016-07-02 17:27 IST   |   Update On 2016-07-02 17:27:00 IST
கடலூரில் வயிற்று வலி காரணமாக பெண் வி‌ஷம் குடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் வண்ணாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா(வயது 37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ஜமுனா திடீரென்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜமுனா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வயிற்று வலி காரணமாக ஜமுனா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Similar News